முத்துப்பேட்டை அருகே வாக்குச்சாவடியில் தாமரை ஓவியம் இருந்ததால் பரபரப்பு

 

முத்துப்பேட்டை, ஏப். 20: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த நொச்சியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 184வது வாக்கு சாவடியில் நேற்று வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது காலை சுமார் 9 மணிளவில் அப்போதே சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் பாட்ஷா வாக்களிக்க வந்திருந்தார் அப்பொழுது வாக்கு சாவடியில் வாக்குப்பதிவு மிஷின் இருக்கும் அருகே உள்ள சுவரில் தாமரை ஓவியம் இருந்தது இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாட்ஷா தேர்தல் அலுவலரிடம் தாமரை ஓவியம் இருக்கலாம்? எப்படி இதனை அழிக்காமல் விட்டீர்கள்? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசார் பாட்ஷாவை சமாதானப்படுத்திய பின்னர் அந்த தாமரை ஓவியத்தை அழித்தனர். இதனால் அரை மணி நேரம் வாக்குப்பதிவு காலதாமதம் ஆனது.

The post முத்துப்பேட்டை அருகே வாக்குச்சாவடியில் தாமரை ஓவியம் இருந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: