கூட்டுறவு மேலாண்மை முழுநேர பட்டயப்பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை முன்பதிவு 29ல் துவக்கம்

 

திருவாரூர், ஏப். 26: திருவாரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் க.சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக செயல்படும் திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ம் கல்வியாண்டில் நடைபெற உள்ள முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கு மாணவிகள் சேர்க்கைக்கான முன்பதிவு வரும் 29ம் தேதி தொடங்குகிறது. பயிற்சியில் சேர விரும்புகிறவர்கள் திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். செப்டம்பரில் துவங்கி, பயிற்சி நடைபெறும்.

பயிற்சி காலம் ஓராண்டாகும். இரு பருவ முறைகளில் பயிற்சி நடைபெறும். பயிற்சி வகுப்புகள் தமிழ் வழியில் மட்டுமே நடத்தப்படும். விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் பயிற்சி கட்டண விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். பயிற்சியில் சேர www.tncuicm.com என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு திருவாரூர் விளமலில் செயல்படும் திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04366-227233 மற்றும் 9443736441. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கூட்டுறவு மேலாண்மை முழுநேர பட்டயப்பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை முன்பதிவு 29ல் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: