திருவாரூர், மார்ச் 12: தமிழக சட்டசபையில் நடைபெறும் மானிய கோரிக்கையில் புதிய கல்விக்கொள்கையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் தமிழகத்திற்கு என்று சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய கல்விக் கொள்கையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உட்பட பல்வேறு புதிய அறிவிப்புகள் உள்ள நிலையில் தற்காலிகமாக நடப்பாண்டில் இந்த 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது ரத்து செய்யப்பட்டாலும் வரும் காலங்களில் இதனை மீண்டும் அமல்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் தமிழக அரசு உடனடியாக இந்த புதிய கல்விக் கொள்கையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.