வாலிபர் மீது தாக்குதல்

சிதம்பரம், மார்ச் 12: சிதம்பரம் சகஜானந்தா தெருவை சேர்ந்தவர்  வெற்றிச்செல்வன் (28). அதே பகுதியில் உள்ள கலைஞர் காலனியைச் சேர்ந்தவர்கள்  அபு என்கிற புஷ்பராஜ் (36), வினோத் என்கிற வினோத்குமார் (30).  இவர்கள் இருவரும் மாசிமக திருவிழாவிற்காக ஊர் நிர்வாகத்திற்கு தெரியாமல்  பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது இதுபற்றி  வெற்றிச்செல்வன் இருவரிடமும் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  இருவரும் வெற்றிச்செல்வனை ஆபாசமாகத் திட்டி இரும்பு கம்பியால் தலையில்  தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயமடைந்த  வெற்றிச்செல்வன் சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து அவர் அளித்த  புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: