தூத்துக்குடி, மார்ச் 11: தூத்துக்குடி அதிகாரிகளால் ஏற்படும் பணிச்சுமையை குறைக்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாநகராட்சியில், ஒப்பந்த ஊழியர்களாக வேலை பார்த்து வரும் துப்புரவு தொழிலாளர்கள் நேற்று காலை திரண்டதோடு அதிகாரிகளால் ஏற்படும் பணிச்சுமையை குறைக்க வலியுறுத்தி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘மாநகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த ஊழியர்களாக துப்புரவு பணியாற்றி வரும் தங்களை தினமும் சேகரிக்கும் குப்பைகளை 5 விதமாக தரம் பிரிக்குமாறு அதிகாரிகள் பணி சுமையை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டினர்.