வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

ஈரோடு, மார்ச் 11:  ஈரோடு மாநகராட்சியில் 2019-20ம் ஆண்டுக்கான வரியினங்கள், நிலுவையில் உள்ள சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்த வேண்டும். இந்த வரி வசூலில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்த வேண்டும். இல்லையென்றால் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை, வீட்டு இணைப்புகளை துண்டிப்பு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரியினங்களை உடனடியாக செலுத்த மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: