பொன்னமராவதி,மார்ச்10: பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டியில் மாசிமகத்திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. மாசிமகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் 8ம் தேதி அருணவள்ளி சமேத பூமிநாதசுவாமி மாசிமக உற்சவ விழாவை முன்னிட்டு கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.இதனைத்தொடர்ந்து நேற்று 9ம் தேதி அங்குள்ள மலம் கண்மாயில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. தாசில்தார் திருநாவுக்கரசு மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தார்.