பொன்னமராவதி அருகே தேரடி மலம்பட்டியில் மஞ்சுவிரட்டு

பொன்னமராவதி,மார்ச்10: பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டியில் மாசிமகத்திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. மாசிமகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் 8ம் தேதி அருணவள்ளி சமேத பூமிநாதசுவாமி மாசிமக உற்சவ விழாவை முன்னிட்டு கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.இதனைத்தொடர்ந்து நேற்று 9ம் தேதி அங்குள்ள மலம் கண்மாயில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. தாசில்தார் திருநாவுக்கரசு மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தார்.

இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. இந்த காளைகளை இளைஞர்கள் விரட்டிப்பிடித்து மகிழ்ந்தனர்.இந்த மஞ்சுவிரட்டில் பங்கேற்ற காளைகளுக்கு வேஷ்டி வழங்கப்பட்டது. பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: