கோபி, மார்ச் 10: கோபி அருகே ஆபத்தான நிலையில் உள்ள குட்டைக்கு தடுப்பு சுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோபியில் இருந்து கலிங்கியம், செம்மாண்டாம்பாளையம், அவ்வையார் பாளையம் வழியாக அயலூர், குருமந்தூர், கொளப்பலூர் செல்லும் சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலையில் செம்மாண்டாம்பாளையத்தில் கீழ்பவானி வாய்க்கால் அருகே ஆபத்தான வளைவு உள்ளது. இந்த வளைவில் சுமார் 10 அடி ஆழமுள்ள கீழ்பவானி வாய்க்காலின் கசிவு நீர் குட்டை உள்ளது. இந்த குட்டையில் பெரும்பாலான நாட்கள் நீர் நிரம்பியே இருக்கும்.