செங்கல்பட்டு மார்ச் 6: செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் 7 தனியார் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த பகுதியில் காலை, மாலை, நேரங்களில் மாணவர்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு, சாலையில் இடையூறாக பழைய பஸ் நிலையம் பகுதியிலும், பள்ளி செல்லும் சாலையிலு, பள்ளியின் நுழைவாயில் அருகிலும் ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன். இதனால், மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.மாணவ, மாணவிகள் செல்லும் சைக்கிள், பள்ளி உள்ளே கொண்டு சென்று நிறுத்த முடியவில்லை, டிக்கெட் ஏற்றுவதற்காக போட்டி போட்டு கொண்டு பள்ளி நுழைவாயிலிலேயே ஷேர் ஆட்டோக்கள் நிறுத்துகின்றனர். இதனால் மாணவர்கள் விரைவாக செல்ல முடியவில்லை. குறிப்பாக மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.தற்போது பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு நடந்து வருகிறது. இந்த நேரத்திலும் ஷேர் ஆட்டோக்கள், மாணவர்களுக்கு இடையூறாக ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால் குறித்த நேரத்தில் தேர்வுக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் தவிக்கின்றனர். ஆசிரியர்களும், மாணவர்களும், ெபாதுமக்களும் கடுமையாக பாதிப்படைகின்றனர். மேலும், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.