காஞ்சிபுரம், மார்ச் 4: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை (நீர்வள ஆதாரம்) சார்பில் நிலத்தடி நீர் வளத்தை பாதுகாக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் உள்ளாவூர் (பழைய சீவரம்) கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை அமைக்கட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழக அரசு, நீர் வளத்தை மேம்படுத்து பொருட்டு பொதுப்பணித் துறை (நீர்வள ஆதாரம்) மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைக் காலங்களில் வெள்ளநீர் பாலாறு வழியாக வீணாக கடலில் கலப்பதை தடுக்க, பாலாற்றின் குறுக்கே மதுராந்தகம் வட்டம், ஈசூர் வள்ளிபுரம், வாலாஜாபாத் வட்டம், வெங்குடி, உள்ளாவூர், திருக்கழுக்குன்றம் வட்டம் வாயலூர், செங்கல்பட்டு வட்டம் பழவேலி, பாலூர், காஞ்சிபுரம் வட்டம் வெங்கடாபுரம் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.