சாத்தான்குளம் அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

சாத்தான்குளம், மார்ச் 4: சாத்தான்குளம் அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சாத்தான்குளம்  அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரத்தை சேர்ந்தவர் ஆண்டியப்பன் மகன்  சிவபெருமாள்(37), கட்டிட தொழிலாளி. வி.கே.புரத்தில் வசித்துவரும் இவரது உறவினரை  பார்க்க கடந்த 29ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றார். 1ம் தேதி வீடு  திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி  அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன்  மோதிரம், கால் பவுன் மதிப்பிலான 1 ஜோடி கம்மல் மற்றும் ரூ.1500 ஆகியவற்றை  மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர், சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ சத்தியபாமா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: