திருவாரூர், மார்ச் 1: மத்திய அரசின் குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் நேற்று தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் 15 இடங்களில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், டெல்லி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று ரயில் நிலையம் முன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளைத் தலைவர் இக்பால் தலைமையில் மாநில செயலாளர் தாவூத், மாவட்ட தலைவர் முகம்மது பாசித், மாவட்ட செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் சலீம் மற்றும் பொறுப்பாளர்கள் அனஸ்நபில், மாலிக் ,பகுருதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் கொடிக்கால்பாளையத்தில் கிளை தலைவர் இலியாஸ் தலைமையிலும், புலிவலத்தில் கிளை தலைவர் பஷீர் தலைமையிலும், மேல ஒதியத்தூரில் கிளை தலைவர் ஜாஹிர் உசேன் தலைமையிலும், அடியக்கமங்கலத்தில் கிளை தலைவர் முகமது ஹக் தலைமையிலும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மேலும் கூத்தாநல்லூர், தண்ணீர் குன்னம், பூதமங்கலம், பொதக்குடி, குடவாசல், நன்னிலம், கொல்லாபுரம், அடவங்குடி உட்பட 15 இடங்களில் இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமை எதிர்ப்பு காத்திருப்பபு தர்ணா போராட்டம் திருத்துறைப்பூண்டி: திருவாரூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருத்துறைப்பூண்டி நகர கிளை சார்பாக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து காத்திருப்பு தர்ணா போராட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.