கடலூர், பிப். 28: கடலூரில் அரசு பொதுத்தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படையினருக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரையிலும், பிளஸ் 1 பொதுத் தேர்வு வரும் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரையிலும் நடக்கிறது. பிளஸ் 2 தேர்வை 229 பள்ளிகளை சேர்ந்த 30 ஆயிரத்து 522 மாணவ, மாணவிகளும், பிளஸ் 1 தேர்வை 235 பள்ளிகளை சேர்ந்த 30 ஆயிரத்து 342 மாணவ, மாணவிகளும் எழுதுகின்றனர். இதற்காக 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு தொடங்க உள்ள நிலையில் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படையினருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில வயது வந்தோர் மற்றும் முறைசாரா பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமை தாங்கினார்.