செய்யூர், பிப்.27: செய்யூர் அடுத்த பவுஞ்சூர் பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த மோதிலால் (45) என்பவர் அடகுக்கடை நடத்தி வந்தார். தனது கடைக்கு வந்த சுமார் 400 பேரிடம், தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி பணம் வசூலித்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த கடந்த தீபாவளி பண்டிகையின் சில நாட்களுக்கு முன் அவர், வங்கியில் இருந்து பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றவர் தலைமறைவாகிவிட்டார்.இதனால், அவரிடம் பணம் கட்டிய மக்கள், அணைக்கட்டு போலீசில் புகார் அளித்தனர். போலீசார், வழக்குப்பதிவு செய்து, மோதிலாலை தேடி வந்தனர். ஆனால் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
இந்நிலையில், தலைமறைவான மோதிலாலை கண்டுபிடிக்காமல் உள்ள போலீசாரை கண்டித்து, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் மாலை மீண்டும் அணைக்கட்டு காவல் நிலையம் சென்றனர். ஆனால் போலீசார் மீண்டும் சமரசம் செய்தனர்.