செய்யூர்: கூவத்தூரில் இருந்து நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் ஒரு ஷேர் ஆட்டோ, 5 பயணிகளை ஏற்றி கொண்டு பவுஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. டிரைவர் செல்வம் (28) ஆட்டோவை ஓட்டினார். ஈசிஆர் சாலை கண்டிகை கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே, ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி, ஷேர் ஆட்டோ மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.இதில், டிரைவர் செல்வம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, துடிதுடித்து இறந்தார். அதில் பயணம் செய்த பள்ளி மாணவி உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.தகவலறிந்து அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.