கடலூர், பிப். 25: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் அக்கடவல்லி கிராம பொதுமக்கள் ஆரா அமுதன் மற்றும் பலர் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் அக்கடவல்லி பஞ்சாயத்தில் பல கட்டுமான பணியில் முறைகேடு நடந்துள்ளது. தனிநபர் கழிவறை, இறந்தவர்கள், ஊரில் இல்லாதவர்கள் பெயரில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுபோன்று மரக்கன்று நடுதல், வாட்டர் டேங்க் மோட்டார் சர்வீஸ் செய்வதிலும், தேசிய ஊரக வேலை வாய்ப்பில் பல லட்சத்திற்கு மேல் முறைகேடு நடந்துள்ளது.