இளையான்குடி, பிப். 21: இளையான்குடியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களே படிக்கும் இந்த கல்லூரியில் சுமார் 2400 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பொன்விழா ஆண்டிற்கு கட்டாய வசூல் செய்ய நிர்பந்தம் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து, கடந்த பிப். 12ம் தேதி விடிய, விடிய பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக 2 பேராசிரியர்களை, கல்லூரி நிர்வாகம் சஸ்பென்ட் செய்த நிலையில், கடந்த பிப். 13ம் தேதி நிர்வாகம், பேராசிரியர் தரப்பினரிடம் நேரில் வந்து விசாரித்து பேசிய, கல்லூரி இனை இயக்குனர் பாஸ்கரன், வரும் பிப். 29ம் தேதிக்குள் இருதரப்புக்கும் இடையில் சுமூகமான முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்தார்.