மே தினத்தில் ரத்ததான முகாம்

 

சிவகங்கை,மே 3: சிவகங்கை அருகே நகரம்பட்டி ஊராட்சி ராமலிங்கபுரம் கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, அசத்தல் கலைக்குழு மற்றும் கிராமத்தினர் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. ராமலிங்கபுரம் கிராமத்தில் உள்ள திருநீலகண்ட நாயனார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில், பாகனேரி அரசு மருத்துவர் பஷீர் ரகுமான் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் ஆதிமூலம், நகரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரன், துணைத்தலைவர் அழகர்சாமி பாக்கிய ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ரத்ததான முகாமில் 11 ஆண்கள், 1 பெண் உள்பட மொத்தம் 12 பேர் ரத்ததானம் வழங்கினர். குறுதி கொடையாளர்களுக்கு உணவு மற்றும் பழ வகைகள் வழங்கப்பட்டது.

The post மே தினத்தில் ரத்ததான முகாம் appeared first on Dinakaran.

Related Stories: