மே தின பொதுக்கூட்டம்

 

சிவகங்கை, மே 3: சிவகங்கையில் சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. குறைந்தபட்ச ஊதியம் ரூ.26ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். தொழிலாளர் நலத்திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாவட்டத் தலைவர் வீரய்யா, ஏஐடியூசி மாவட்ட தலைவர் காளைலிங்கம் தலைமை வகித்தனர். இந்திய தேசிய மாதர் சம்மேளன மாநில தலைவர் மஞ்சுளா, சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் தெய்வராஜ் சிறப்புரையாற்றினர். சிஐடியு மாவட்ட செயலாளர் சேதுராமன், ஏஐடியுசி மாவட்ட துணை செயலாளர் கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சாத்தையா, மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

The post மே தின பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: