மதுராந்தகம், பிப். 21: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பில், மதுராந்தகம் அடுத்துள்ள வையாவூரில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மதுராந்தகம் வட்டாரத்தில் வையாவூர், மலைவையாவூர், பட்டுவாரி நகர், மாம்பட்டு, காந்திநகர், இலுப்பு தோப்பு, மூசிவாக்கம், கொளம்பாக்கம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்குள்ள, நத்தம், களம், மேய்ச்சல், கல்லாங்குத்து ஆகிய புறம்போக்கு இடங்களில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவர்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்பு அமைத்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வையாவூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக காத்திருக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.