சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

தஞ்சை, பிப். 20: தஞ்சையில் வக்கீல்கள் நேற்று கருப்பு தினமாக அனுசரித்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். சென்னையில் 2009ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி போலீசார்- வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் போலீசாரால் தாக்கப்பட்டனர். இந்நாளை வழக்கறிஞர்கள் கருப்பு நாளாக ஆண்டுதோறும் அனுசரித்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று கருப்பு நாளாக அனுசரித்து தஞ்சையில் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் கீர்த்தி ராஜ் தலைமையில் 1,200க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories: