திருமயம், பிப்.20: திருமயம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து பஸ் ஸ்டாப்புகளும் சேதமடைந்துள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வழியாக திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலை 10 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்டது. அப்போது சாலையோரம் இருந்த மரங்கள் அகற்றப்பட்டதுடன் டவுன் பஸ் நின்று செல்ல கிராம மக்களுக்காக கட்டப்பட்டிருந்த 14 பஸ் பஸ்டாப்புகளும் அகற்றப்பட்டது. அகற்றபட்ட 14 பஸ் ஸ்டாப்புகளுக்கு பதிலாக தற்போது 8 ஸ்டாப்புகள் மட்டுமே கட்டப்பட்டுள்ள நிலையில் அதையும் அதிகாரிகள் சரிவர பராமரிப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் கேட்டபோது நமணசமுத்திரத்தில் இருந்து சவேரியர்புரம் வரை செல்லும் சாலை மாநில சாலையாக இருந்தபோது இருந்த பஸ் பஸ்டாப்புகள் கான்கிரீட்டால் மூன்று புறம் சுவர்களால் மறைக்கப்பட்ட பஸ் ஸ்டாப்புகளாக இருந்தது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையான பின்னர் அனைத்து பஸ் ஸ்டாப்புகளும் இடிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் நான்கு குழாய் கம்பிகளை நட்டு அதன் மேல் 3 தகரத்தை கொண்டு மூடி பஸ் ஸ்டாப்பு போல் கட்டி கொடுத்தனர்.