திருப்புத்தூர், பிப்.17: திருப்புத்தூர் தாலுகா கண்டரமாணிக்கம் ஊராட்சி சார்பில் “தூய்மை கிராமம்-முன்மாதிரி கிராமம்” வலியுறுத்தி முதலாம் ஆண்டு மாபெரும் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியை கண்டரமாணிக்கத்தை சேர்ந்த அகில இந்திய கால்பந்தாட்ட வீரர் ராமன்விஜயன், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மற்றும் கண்டரமாணிக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ராமு கனகு கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்து கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தனர்.