ஆலந்தூர், பிப். 17: ஆதம்பாக்கம் மண்ணடியம்மன் கோயில் தெருவில் பொதுநல சங்கத்திற்கு சொந்தமான 6 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு கொண்ட இடம் உள்ளது. இந்த இடத்தில் ஆதம்பாக்கம் காவல் நிலையம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்கு பொது நல சங்க நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சவுரிநாதன் மற்றும் ஆதம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலன் ஆகியோர் பொது நல சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.