குளத்தூர் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

குளத்தூர், பிப். 12: குளத்தூர் மாரியப்பன் நாடார் -முத்துக்கனியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது. கல்லூரி நிறுவனர் தாமஸ் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் கோபால் முன்னிலை வகித்தார். வணிகவியல் துறை தலைவி ஏஞ்சல்ஜெனிட்டா வரவேற்றார். கல்லூரி முதல்வர் அன்பழகன் பேசுகையில், பெற்றோர் தங்களது குழந்தைகளின் கல்வி திறன், தேர்ச்சி குறித்த விவரங்களை தெரிந்து கொண்டு அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய கல்லூரியோடு இணைந்து செயல்பட வேண்டும், என்றார். தொடர்ந்து கல்லூரி மற்றும் மாணவர்களின் வளர்ச்சி குறித்து பெற்றோர் கலந்துரையாடினர். ஆங்கிலத்துறை பேராசிரியர் பிரியங்கா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் மனோரஞ்சிதம் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: