திருத்துறைப்பூண்டி, பிப். 12: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மேல கொருக்கை தனியார் பள்ளியில் கிராமங்களை நோக்கி என்ற நூல் வெளியீட்டு விழா மற்றும் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்து. வக்கீல் கதாக அரசு தாயுமானவன் நாகராஜன் எழுதிய கிராமங்களை நோக்கி என்ற நூலை வெளியிட்டார், சிறப்பு விருந்தினராக வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி கலந்து கொண்டு பேசினார். பள்ளி மாணவர்களுக்கு நூலகத்தின் பயன்கள், நூல்களின் பெருமைகள் குறித்து விளக்கப்பட்டது.