தஞ்சை,பிப்.12: தஞ்சை அருகே சூரக்கோட்டையில் பதுங்கியிருந்த 5கூலிப்படையினரை ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை அருகே சூரக்கோட்டையை சேர்ந்தவர் ராஜா. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அவரது வீட்டில் கூலிப்படையினர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஐஜி லோகநாதன் உத்தரவின்பேரில், எஸ்.பி.மகேஸ்வரன் மேற்பார்வையில் தனிப்படை எஸ்ஐ கண்ணன், எஸ்எஸ்ஐ பிரகாசம் மற்றும் போலீசார் சூரக்கோட்டையில் ராஜா வீட்டில் பதுங்கியிருந்த திருநேல்வேலியை சேர்ந்த இசக்கி, திருச்சியை சேர்ந்த கார்த்தி, திண்டுக்கலை சேர்ந்த ராஜபாண்டி,