தஞ்சாவூரில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

தஞ்சாவூர்,ஏப்.27: தஞ்சாவூர் தொல்காப்பியர் சதக்கம் அருகே உள்ள மேம்பாலம் பகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு அப்பகுதியில் செல்லும் பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் தஞ்சாவூர் கிழக்கு சப் இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர் திருச்சி மாவட்டம் பொன்மலை பகுதியைச் சேர்ந்த மணி மகன் கார்த்திக் (29) என்பதும் இவர் மது வாங்குவதற்காக பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைதான கார்த்திக் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The post தஞ்சாவூரில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: