சீர்காழி,பிப்.12: சீர்காழி தென்பாதியில் பல ஆண்டுகளாக குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி தென்பாதி வஉசி தெற்கு தெருவில் நகராட்சி மூலம் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பைப்பில் சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றிலிருந்து பைப்லைன் மூலம் தண்ணீர் எடுத்து வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வரும் பைப்பில் பல ஆண்டுகளாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. பொதுமக்கள் தண்ணீர் பிடித்து போக மற்ற நேரங்களில் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.