ஈரோடு, பிப். 12: ஈரோடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் நடத்தும் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பயிற்சி நிலைய முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடப்பாண்டுக்கான 21வது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. இப்பயிற்சியில் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் சேரலாம்.