கடமலையில் களைகட்டிய கபடி

வருசநாடு, பிப்.11: கடமலைக்குண்டு கிராமத்தில் பீனிக்ஸ் இளைஞர் குழு சார்பில் கபடி போட்டி நடைபெற்றது. கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தும்மக்குண்டு, கண்டமனூர், தேனி, ஆண்டிபட்டி, கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கடமலைக்குண்டு ஊராட்சிமன்ற தலைவர் சந்திராதங்கம், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் தனபால், கடமலைக்குண்டு சமூக ஆர்வலர் விரகுகடைசெல்வம், பீனிக்ஸ் கபடி குழு தலைவர் பிரபாகரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கடமலைக்குண்டு காவல்துறை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், கடமலைக்குண்டு காவல்துறை சார்பு ஆய்வாளர் பன்னீர் மற்றும் பீனிக்ஸ் குழு பொருளாளர் இளங்கோவன் மற்றும் விழாவுக்கான முழு ஏற்பாடுகளை கடமலைக்குண்டு பீனிக்ஸ் கபடி குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: