சிதம்பரம், ஜன. 30: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி சிதம்பரம் பாசிமுத்தான் ஓடையில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள பாசிமுத்தான் ஓடையில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் ஒருவரின் சடலம் கிடப்பதாக சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சடலமாக கிடந்தவரை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த கலவை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (44) என்பதும், இவர் சிதம்பரம் தங்கி கூலிவேலை செய்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.