திண்டுக்கல், ஜன. 28: திண்டுக்கல் என்ஜிஓ காலனி பகுதியில் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. திண்டுக்கல் ஒன்றிய கழக செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகிக்க, நகர செயலாளர் ராஜப்பா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜா, சீலப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சி, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் செந்தில்குமார், நகர மாணவரணி அமைப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சூசை ராபர்ட் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தலைமை கழக பேச்சாளர்கள் விஜயா, இளஞ்செழியன், மலர்வண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் தண்டபாணி, நாகராஜன், பொருளாளர் மணி முருகன், ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.