மாமல்லபுரம், ஜன. 28: மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கடம்பாடியில் இருந்து கிழக்கு கடற்கரை செல்லும் சாலையில் கடம்பாடி ஊராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஒரு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. 5 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருந்து தொட்டி, முறையாக பராமரிக்காமல் விட்டதால், கடந்த 3 ஆண்டுகளாக பாழடைந்து கேட்பாரற்று கிடக்கிறது. இந்த ஒரு தொட்டியில் வரும் தண்ணீர் பிடித்து குடிப்பதற்கும், சமைப்பதற்கும் அப்பகுதி மக்கள் பயன்படுத்தினர். இந்த தொட்டியின் ஒரு பகுதியில், விரிசல் ஏற்பட்டுள்ளது. அதில், உள்ள குழாய்கள் துருப்பிடித்தும் பாழடைந்தும் காட்சி பொருளாக உள்ளது. இதனால், தண்ணீர் பிடித்து பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.