செம்பட்டி அருகே தேசிய கபடி போட்டியில் சாதித்தவர்களுக்கு பாராட்டு

திண்டுக்கல், ஜன. 22: சென்னையில் தேசிய அளவிலான கபடி போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் இந்திய அளவில் 12 அணிகள் கலந்து கொண்டன. தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்ட அணியில் செம்பட்டி அருகே கூலம்பட்டியை சேர்ந்த செல்லப்பாண்டி (21), அஜீத்குமார் (21) ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் தமிழக அணி தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்று செல்லப்பாண்டி, அஜீத்குமார் உள்பட 12 பேருக்கு சான்றிதழ்கள், கோப்பை வழங்கப்பட்டது. தேசிய அளவிலான கபடி போட்டியில் சாதனை புரிந்த செல்லப்பாண்டி, அஜீத்குமாருக்கு பாராட்டு விழா கூலம்பட்டி ஊர்மக்கள் சார்பில் நடைபெற்றது. விழாவில் இருவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினர். இதில் தமிழக கபடி பயிற்சியாளர் கார்த்திகேயன், கூலம்பட்டி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: