நீடாமங்கலம்,ஜன.21: நீடாமங்கலம் பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பருவமழை பொய்த்தாலும்,மேட்டூர் அணையிலிருந்து காலத்தில் தண்ணீர் திறக்காததாலும் விவசாயிகள் சரியான நேரத்தில் சாகுபடி பணியை தொடங்கமுடியாமல் கவலையில் இருந்தனர்.இந்த ஆண்டு பருவமழை தாமதமாக பெய்தாலும் மூன்று முறை மேட்டூர் அணை நிரம்பியது. ஆனாலும் விவசாயத்திற்கு தாமதமாக தட்டுப்பாடின்றி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு சம்பா மற்றும் தாளடிபணியை விவசாயிகள் தொடங்கினர். விவசாயிகள் நெற்பயிருக்கு சரியான உரங்களை இட்டு பராமரித்து பாதுகாத்து வரும் நிலையில் கடந்த மாதம் பெய்த பருவமழையில் நீடாமங்கலம் வட்டாரத்தில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சில இடங்களில் இளம் பயிர்கள் அழுகியது. சில இடங்களில் அழுகிய நெல்பயிரில் உள்ள தண்ணீரை வடியவைத்து வயல் காய்ந்த உடன் உரங்கள் அடித்ததால் பயிர்கள் ஓரளவு நன்றாக விளைந்து வந்தது.