மயிலாடுதுறை, ஜன.21: சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மயிலாடுதுறை காவேரி நகர் சந்திப்பிலிருந்து புறப்பட்டபேரணியை டிஎஸ்பி அண்ணாதுரை துவக்கினார். சாலை விதிகளை கடைப்பிடிப்பது, தலைக்கவசம் அணிவதன் நன்மை போன்றவற்றை பற்றி விளக்கப்பட்டது. தங்களின் நண்பர்களுக்கும் இதுகுறித்து அறிவுத்த கூறப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகநாதன் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.