மயிலாடுதுறை, ஜன.21: மயிலாடுதுறையில் கொலை குற்றவாளின் வீட்டை சூறையாடிவிட்டு, பைக்கை தீவைத்து எரித்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வரதாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் மூக்கையன் மகன் மணிகண்டன்(26). இவர் பன்றி வளர்த்து அவற்றை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். தொழில் போட்டி காரணமாக கடந்த 2014ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் என்ற நபரை ஓடஓடவிரட்டி வெட்டிக்கொலை செய்த வழக்கில் மணிகண்டன், அவரது உறவினர்கள் முனுசாமி, வீரையன், ரெங்கசாமி, பெரியண்ணன், ராஜா ஆகியோர் உள்ளனர். அந்த வழக்கு இதுவரை முடியவில்லை. இதற்கிடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜாவை தொழில்போட்டி காரணமாக நாகையில் ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது.