நாகை, ஜன.21: நாகை புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர் பவனி கோலாகலமாக நடந்தது. நாகை காடம்பாடியில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் மாலை 6 மணிக்கு செபமாலை, நவநாள் ஜெபம், திருப்பலி ஆகியவை வெகு சிறப்பாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக தேர் புனிதம் செய்யப்பட்டது.