காரைக்குடி, ஜன.14: காரைக்குடி அருகே செட்டிநாடு சிபிஎஸ்இ பள்ளியில் ஜெர்மன், இத்தாலி நாட்டு மாணவிகள் தமிழர் பாண்பாட்டின்படி உடைஅணிந்து பொங்கல் வைத்து அசத்தினர். காரைக்குடி அருகே செட்டிநாடு சிபிஎஸ்இ பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாப்பட்டது. கல்விகுழு துணை தலைவர் அருண் வரவேற்றார். கல்விகுழும தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் சாந்திகுமரேசன் முன்னிலை வகித்து விழாவை துவக்கி வைத்தார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுடன் சேர்ந்து ஏஎப்எஸ் திட்டத்தின் கீழ் இப்பள்ளியில் படிக்கும் ஜெர்மன், இத்தாலி நாட்டு மாணவிகள் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. உறியடித்தல் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.