தஞ்சை, ஜன. 13: தஞ்சையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்ற 14 பேரை போலீசார் கைது செய்தனர். சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் விடுமுறை அறிவிக்கவில்லை. இந்நிலையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட அமைப்பு அறிவித்தது.