திருவாரூர், ஜன.12: திருவாரூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக் கான தேர்வினை ஆயிரத்து 311 பேர் எழுதுவதாக எஸ்பி துரை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் நேரடி எஸ்ஐ பதவிக்கான எழுத்துத்தேர்வு இன்றும் (12ம் தேதி, நாளையும் ( 13ம்தேதி) என இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. அதன்படி இன்று பொதுத் தேர்வர்களுக்காக நடைபெறும் தேர்வினை மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 311 பேர் எழுதுகின்றனர். மேலும் நாளை (13ம்தேதி) போலீஸ் துறையை சேர்ந்தவர்களுக்காக நடைபெறும் இந்த தேர்வினை 171 போலீசார் எழுதுகின்றனர். இதற்கான தேர்வு மையம் திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.