சத்தியமங்கலம், ஜன. 12: சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் பாசனப்பகுதிகளில் நெல் அறுவடை பணி தொடங்கியது.
பவானிசாகர் அணையிலிருந்து கடந்த 2019ம் ஆண்டு ஆக.16ம் தேதி கீழ்பவானி பாசனப்பகுதிகளில் இரட்டைப்படை மதகு பாசனப்பகுதிகளில் உள்ள 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீரை பயன்படுத்தி ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் நெல் பயிரிட்டனர்.