ஊராட்சி தலைவர்கள் வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு

தேவாரம், ஜன.10: தேவாரம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பினை ஊராட்சி தலைவர்கள் பொதுமக்களுக்கு அளித்தனர். தேவாரம் அருகே டி.சிந்தலைசேரியில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாக்கள் நடைபெற்றன. தேவாரம் அருகே டி.சிந்தலைசேரியில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1000 மற்றும் சீனி, கரும்பு, ஏலம் உள்ளிட்ட தொகுப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசுதொகுப்பை வழங்கினார். கோம்பை அருகே மேலசிந்தலைசேரி ஊராட்சியில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலைகளை ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் வழங்கினார். இதில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Related Stories: