வாலாஜாபாத், ஜன. 10: வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 2019-2020ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சியை கலெக்டர் பொன்னையா நேற்று தொடங்கி வைத்தார். இதில் அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளை சேர்ந்த 55 மாணவ, மாணவிகள், அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 28 மாணவ, மாணவிகள், அரசு உதவிபெறும், மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 4 மாணவ, மாணவிகள், சிபிஎஸ்இ பள்ளிகளை சேர்ந்த 13 மாணவ, மாணவிகள் என மொத்தம் 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பென்னையா பேசியதாவது:தமிழகத்தில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது பணிகளை தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் நிறைவேற்றி வருகிறது. இந்த கண்காட்சியில் மாணவர்கள் அறிவியல் படைப்பு விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சிறந்த படைப்புகள் வல்லுநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.