பாரியூர் அம்மன் கோயில் திருவிழா சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஈரோடு, ஜன.3:ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே பாரியூர் அம்மன் திருக்கோயில் குண்டம் மற்றும் தேர்திருவிழா வரும் ஜன.8ம் தேதி துவங்குகிறது. தேர்திருவிழாவையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அன்படி, 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஈரோடு மண்டலத்தின் சார்பில் சத்தியமங்கலம், கோபிச்செட்டிபாளையம், கவுந்தப்பாடி, ஆப்பக்கூடல், பவானி, அந்தியூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு பஸ்களின் வசதியை பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் கதிரவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: