ஈரோடு, ஜன.3: ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே கொம்மக்கோவில் காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கவிதா (31). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர். கார்த்திகேயன் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். கவிதாவிற்கு கடந்த 10 ஆண்டுகளாக மாதவிடாய் காலங்களில் தீராத வயிற்றுவலி இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 31ம் தேதி இரவு கவிதாவிற்கு திடீரென வயிற்றுவலி அதிகரித்தது. இதுகுறித்து தனது தாய் கருப்பாளுக்கு போன் செய்து வயிற்று வலி அதிகமாக இருப்பதாகவும், வீட்டிற்கு வருமாறும் அழைத்தார்.