ஸ்பிக்நகர், டிச. 30: தூத்துக்குடி முத்தையாபுரம் சுபாஷ்நகர் 2வது தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (56). கட்டுமான கூலித் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டார். இதை அவரது மனைவி கண்டித்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த நிலையில் இருந்த பால்ராஜ், நேற்று முன்தினம் மாலை தனது மனைவி, பிள்ளையை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே மதுவில் விஷம் கலந்து குடித்தார். பின்னர் தெரியவந்ததும் அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றொரு சம்பவம்: முள்ளக்காட்டில் மதுவில் விஷம் கலந்துகுடித்த கூலி தொழிலாளியும் பரிதாபமாக இறந்தார்.