கிட்டாம்பாளையம் ஊராட்சியை குறைகள் இல்லாத ஊராக மாற்றுவேன்

சோமனூர், டிச.29: சோமனூர் அடுத்த கிட்டாம்பாளையம் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஎம்சி.சந்திரசேகர் நேற்று ஆட்டோரிக்ஷா சின்னத்திற்கு வாக்கு கேட்டு அனைத்து வார்டுகளிலும் வாகன பேரணி நடத்தினார்.அப்போது அவர் பேசுகையில், வெற்றி பெற்றவுடன் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் பிரச்னை, சாலைகள் அமைக்க, தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முனைப்புடன் செய்து தருவேன். வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடும், இலவச வீட்டு மனைபட்டா தரவும் உரிய ஏற்பாடுகளை செய்வேன்,’’ என்றார். இந்த பேரணியில் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வி.எம்.சி.மனோகரன் கலந்து கொண்டார்  கிட்டாம்பாளையம், வடுகபாளையம், குளத்துபாளையம், வினோபாநகர், உள்ளிட்ட 9 வார்டுகளிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்பி.முருகேசன், துரைமணி, பாலு, அப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.