முசிறி, டிச.18: முசிறி, தொட்டியம், தா.பேட்டை ஒன்றியத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முசிறி ஒன்றியத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்களில் பரிசீலனையில் 9 மனுக்களும், தொட்டியம் ஒன்றியத்தில் 9 மனுக்களும், தா.பேட்டை ஒன்றியத்தில் 3 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை முசிறி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் 10,ஒன்றிய கவுன்சிலர் 102, ஊராட்சி மன்ற தலைவர் 173, ஊராட்சி வார்டு உறுப்பினர் 641 சேர்த்து 926 பேரும், தொட்டியம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் 11, ஒன்றிய கவுன்சிலர் 85, ஊராட்சி மன்ற தலைவர் 142, ஊராட்சி வார்டு உறுப்பினர் 688 பேரும் சேர்த்து 926 நபர்களும், தா.பேட்டை ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் 4, ஒன்றிய கவுன்சிலர் 72, ஊராட்சித் தலைவர் 145, ஊராட்சி வார்டு உறுப்பினர் 537 சேர்த்து 758 நபர்கள் தற்போதைய நிலவரப்படி களத்தில் உள்ளனர்.